சென்னையில் நாளை(ஜூன் 3) மலர் கண்காட்சி தொடக்கம்

சென்னை கலைவாணர் அரங்கில் மலர் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை கலைவாணர் அரங்கில் மலர் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கிறார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு தோட்டக்கலைத் துறை சார்பில் முதல்முறையாக கலைவாணர் அரங்கில் மலர் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கும் இந்த மலர் கண்காட்சியை ஜூன் 5ஆம் தேதி வரை பொதுமக்கள் இலவசமாக காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மலர் கண்காட்சியில், பல்வேறு விதமான மலர்கள், மலர்களால் ஆன அலங்காரப் பொருள்கள் உள்ளிட்டவை இடம்பெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com