காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,249 கனஅடியாக அதிகரித்துள்ளது.
புதன்கிழமை காலை 116.12 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று வியாழக்கிழமை காலை 115.66 அடியாக சரிந்தது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2006 அடியிலிருந்து வினாடிக்கு 2249 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 86.71 டி.எம்.சியாக உள்ளது.