அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட 10 சாமி சிலைகள் சென்னை கொண்டு வரப்பட்டன.
தஞ்சை, நெல்லை, அரியலூர் கோயில்களில் காணாமல் போன சிலைள் அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்டுள்ளன.
நடராஜர், சிவன், பார்வதி உட்பட 10 சாமி சிலைகளை வெளிநாடுகளில் இருந்து இந்திய தொல்பொருள் துறை மீட்டுள்ளது. அதன்படி தில்லியில் இருந்து சென்னை கொண்டுவரப்பட்ட 10 சிலைகளும் கும்பகோணம் சிலைக் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் முதலில் ஒப்படைக்கப்படும். பின்னர் நீதிமன்றம் மூலம் அறநிலையத்துறையிடம் 10 சாமி சிலைகளையும் காவல்த்துறையினர் ஒப்படைக்க உள்ளனர்.