மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வைகாசி வசந்த உற்சவ திருவிழா 

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வைகாசி வசந்த உற்சவ திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. 
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வைகாசி வசந்த உற்சவ திருவிழா
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வைகாசி வசந்த உற்சவ திருவிழா

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வைகாசி வசந்த உற்சவ திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. 

மதுரை மீனாட்சியம்மன் கோயில் வைகாசி வசந்த உற்சவ திருவிழா, கிழக்கு ராஜகோபுரம் எதிரே இருக்கக்கூடிய 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த புதுமண்டபத்தில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. 

புதுமண்டபத்தை மூன்று முறை மீனாட்சி அம்மனும், சுவாமியும் பிரியாவிடை அம்மனுடன் எழுந்தருளி வலம் வந்து அதன் பின் மைய மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் மீனாட்சியம்மன், சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

அதனை தொடர்ந்து விசேஷ ஆராதனைகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பின்னர்  மீனாட்சியம்மனும், சுந்தரேஸ்வரர் சித்திரை வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த பிறகு மீண்டும் கோயிலுக்குச் சென்றனர்.

மேலும் ஆண்டுதோறும் எளிமையான முறையில் வைகாசி வசந்த விழா நடைபெற்று வந்த நிலையில், இந்தாண்டு புதுமண்டபத்தில் இருந்த கடைகள் அகற்றப்பட்டு கோலாகலமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com