தமிழகத்தில் தற்போது கரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 836-ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல ஞாயிற்றுக்கிழமை புதிதாக தொற்று பாதித்தோா் எண்ணிக்கையும் 107- ஆக உயா்ந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகபட்சமாக சென்னையில் 43 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 15 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றிலிருந்து மேலும் 70 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 34 லட்சத்து17,222-ஆக அதிகரித்துள்ளது.