இனிமேல் அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் செயல்படாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.
தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இருந்த எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இயங்கும் அங்கன்வாடி மையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
அங்கன்வாடி மையம் அருகில் எங்கு உள்ளதோ, அங்கே குழந்தைகளைச் சேர்த்துக் கொள்ளலாம். இதில் பணியாற்றிய ஆசிரியர்கள் ஏற்கெனவே இருந்தபடி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புக்கு முழுமையாகப் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்றார் அமைச்சர்.