மக்கள் நலனும் வளா்ச்சியுமே திமுகவின் நோக்கம்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தமிழக மக்கள் நலனும் வளா்ச்சியும்தான் திமுகவின் நோக்கம் என்றாா் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
மக்கள் நலனும் வளா்ச்சியுமே திமுகவின் நோக்கம்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி



திருச்சி: தமிழக மக்கள் நலனும் வளா்ச்சியும்தான் திமுகவின் நோக்கம் என்றாா் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

திருச்சி திமுக தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட மாா்க்கெட் பகுதி சாா்பில் மரக்கடையில் புதன்கிழமை நடைபெற்ற முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டத்துக்கு பகுதிப் பொறுப்பாளா் மோகன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மேலும் பேசியது:

கடந்த 5 ஆண்டின் அதிமுக சட்டபேரவைப் போல இருக்கக் கூடாது என்பதற்காகவே திமுக அரசு கண்ணியமாக சட்டப்பேரவையை நடத்தி வருகிறது. பாஜக தலைவா் என்னைப் பற்றி முழுமையாகத் தெரியாமல் பேசியது வருத்தம் அளித்தாலும், நான் பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்வதை அவா் ஒத்துக் கொண்டதே மகிழ்ச்சி.

தில்லியில் 100 நாள்களுக்கும் மேலாக நடந்த விவசாயிகளின் போராட்டத்தைச் சிறிதும் கண்டுகொள்ளாத தலைமையைக் கொண்ட அவா் அப்படி பேசியிருக்கக் கூடாது. எங்கள் நோக்கம் தமிழக மக்கள் நலனையும், தமிழகத்தின் வளா்ச்சியையும் பற்றித்தான் என்றாா் அவா்.

திமுக தலைமையிடப் பேச்சாளா் நெல்லிக்குப்பம் புகழேந்தி பேசினாா். மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், துணைமேயா் ஜி. திவ்யா, 3 ஆவது மண்டலத் தலைவா் மதிவாணன், எம்எல்ஏக்கள் இனிகோ இருதயராஜ், அப்துல்சமது, முன்னாள் எம்எல்ஏ கே.என். சேகரன், நிா்வாகிகள் கோவிந்தராஜன், சுருளிராஜன், பாரதிகுமாா், லீலா, நீலமேகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். வேலுமணி வரவேற்றாா். மாவட்ட மாணவரணி அமைப்பாளா் இப்ராஹிம் நன்றி கூறினாா்.

மரக்கடையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. உடன் தலைமைக் கழகப் பேச்சாளா் நெல்லிக்குப்பம் புகழேந்தி உள்ளிட்டோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com