காஞ்சிபுரம் சின்னயங்குளம் பகுதியில் உள்ள மின்மாற்றியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் மின்மாற்றி வெடித்து சிதறியதால் அருகில் குடியிருப்புகளில் இருந்தவர்கள் வீட்டில் இருந்து அலரியடித்துக் கொண்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட சின்னயங்குளம் பகுதியில் மின்மாற்றியில் பிற்பகலில் லேசான பழுது ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக மின் மாற்றியில் தீ பொறி ஏற்பட்டுள்ளது. அப்போது பொதுமக்கள் மின்சாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், மின்சாரத் துறை அதிகாரிகள் யாரும் இந்த சம்பவத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை
காஞ்சிபுரம் சின்னயங்குளம் பகுதியில் உள்ள மின்மாற்றி தீ விபத்து ஏற்பட்டு வெடித்து சிதறியது மின்மாற்றி அருகே குடியிருப்புகளில் இருந்த பொதுமக்கள் வீட்டில் இருந்து அலரியடித்துக் கொண்டு வெளியேறி ஓட்டம்பிடித்தனர்.
உடனே, காஞ்சிபுரம் தீயணைப்புதுறை அதிகாரிகளுக்கு தகவல் தெரியபடுத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 5 தீயணைப்புதுறை வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அனைத்தனர்
தீ விபத்து காரணமாக யாருக்கும் எந்த காயமும் இல்லாமல் உயிர் தப்பினர்.
மின்சாரத்துறை அதிகாரிகளின் மெத்தனப்போக்கே இந்த விபத்திற்கான காரணம் என இப்பகுதிவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், தீ விபத்தில் வெடித்து சிதறிய மின்மாற்றியை மாற்றிவிட்டு புதிய மின்மாற்றி அமைக்கும் பணிக்காக கூடுதல் வசூல் நடைபெற்றுள்ளது.