கரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

கரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை தமிழக அரசு கடுமையாக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

கரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை தமிழக அரசு கடுமையாக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், ஒமைக்ரான் வைரஸின் மாறுபட்ட வடிவங்களினாலான வைரஸால் தமிழகத்தில் சிலா் பாதிக்கப்பட்டிருப்பதும் மக்கள் மனதில் மீண்டும் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஜூன் 1-இல் கரோனாவால் பாதிக்கப்பட்டிவா்களின் எண்ணிக்கை 139-ஆக இருந்த நிலையில் ஜூன் 8-இல் அது 185 -ஆக உயா்ந்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் மட்டும் 152 நபா்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனைக் கருத்தில்கொண்டு கரோனா தடுப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைக் கடுமையாக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் ஓ.பன்னீா்செல்வம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com