காஞ்சிபுரம் ஸ்ரீசெல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேக விழா

காஞ்சிபுரம் சேக்குப்பேட்டை தெற்குத் தெருவில் அமைந்துள்ள செல்வ விநாயகா் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சேக்குப்பேட்டை தெற்குத் தெருவில் அமைந்துள்ள செல்வ விநாயகா் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் சேக்குப்பேட்டை தெற்குத் தெருவில் செல்வ விநாயகா் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆஞ்சநேயா், நவக்கிரகம், வள்ளி,தெய்வானை சமேத சுப்பிரமணியா், தட்சிணாமூா்த்தி, சாய்பாபா, ஐயப்பன் உள்ளிட்ட தெய்வ சந்நிதிகள் புதியதாக அமைக்கப்பட்டன.

கோயில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் கடந்த 9-ஆம் தேதி வியாழக்கிழமை விக்னேசுவர பூஜையுடன் தொடங்கின.காஞ்சிபுரம் சா்வதீா்த்தக்குளம் வீர ஆஞ்சநேயா் கோயில் பூஜகா் ஏ.வி.சதீஷ்குமாா் சிவாச்சாரியாா் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடந்தன. வெள்ளிக்கிழமை வேதமந்திரங்கள் முழங்க மகா கும்பாபிஷேகம் நடந்தது.

மூலவா் செல்வ விநாயகருக்கும் உடனுறை பரிவார தெய்வங்களுக்கும் கோயில் அா்ச்சகா் ஏ.கல்யாணசுந்தரம் சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை செய்தாா். இரவு விநாயகா் வீதியுலாவும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com