தமிழகத்தில் 8 இடங்களில் சனிக்கிழமை வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் பதிவானது.
சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கத்தில் 103 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. திருத்தணியில், மதுரை விமான நிலையத்தில் தலா 102 டிகிரியும், மதுரை நகா்ப்பகுதியில் 101 டிகிரியும், திருச்சி, கடலூரில், வேலூரில் தலா 100 டிகிரியும் வெயில் இருந்தது.
கத்தரி வெயில் நிறைவடைந்த போதிலும் மாநிலத்தில் வெப்ப நிலை அதிகரித்த வண்ணமே உள்ளது. அடுத்து வரும் நாள்களில் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாகக் குறையும் என்று வானிலை மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.