தமிழ்நாட்டில் புதிதாக 589 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (வெள்ளிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கரோனா பாதிப்பு பற்றிய சமீபத்திய தரவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி மொத்தம் 589 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 208 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 34,59,586 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க | சுவிஸ் வங்கியில் 50% அதிகரித்த இந்தியர்களின் கருப்புப் பணம்
கடந்த 24 மணிநேரத்தில் கரோனா தொற்றால் யாரும் பலியாகவில்லை. இதனால் மொத்த பலி எண்ணிக்கை 38,026 ஆக உள்ளது. அதிகளவாக சென்னையில் 286 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.