சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 1 மணி நேரத்திற்கு மேலாக அமைச்சர் திடீர் ஆய்வு

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று 1 மணி நேரத்திற்கும் மேலாக திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 1 மணி நேரத்திற்கு மேலாக அமைச்சர் திடீர் ஆய்வு

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று 1 மணி நேரத்திற்கும் மேலாக திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் சரிவர கிடைக்கிறதா என்று கேட்டறிந்தார். 

மேலும் மருத்துவமனையில் மருந்தகம், தீவிர சிகிச்சை மருத்துவப் பிரிவு, தீவிர சிகிச்சை நச்சுயியல் பிரிவு, தீவிர அறுவை சிகிச்சை பிரிவு, கட்டண வார்டு, டிஏஇஐ வார்டு, எலும்பு முறிவு பிரிவு ஆகியவற்றை 1 மணிநேரத்திற்கும் மேலாக ஆய்வு மேற்கொண்டு அங்கு பணியிலிருந்த மருத்துவர்களை, நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகளை சரிவர வழங்கி, மருந்துகள் எந்தவித குறையுமின்றி சரிவர கிடைக்க செய்யுமாறு அறிவுறுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com