சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று 1 மணி நேரத்திற்கும் மேலாக திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் சரிவர கிடைக்கிறதா என்று கேட்டறிந்தார்.
இதையும் படிக்க- அக்னிபத்: சென்னையிலும் போராட்டம் தொடங்கியது!
மேலும் மருத்துவமனையில் மருந்தகம், தீவிர சிகிச்சை மருத்துவப் பிரிவு, தீவிர சிகிச்சை நச்சுயியல் பிரிவு, தீவிர அறுவை சிகிச்சை பிரிவு, கட்டண வார்டு, டிஏஇஐ வார்டு, எலும்பு முறிவு பிரிவு ஆகியவற்றை 1 மணிநேரத்திற்கும் மேலாக ஆய்வு மேற்கொண்டு அங்கு பணியிலிருந்த மருத்துவர்களை, நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகளை சரிவர வழங்கி, மருந்துகள் எந்தவித குறையுமின்றி சரிவர கிடைக்க செய்யுமாறு அறிவுறுத்தினார்.