தனியார் ஹோட்டல் குழுமம் ரூ. 400 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை திங்கள்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது.
பொழுதுபோக்கு பூங்கா, சொகுசு ஹோட்டல்கள் நடத்தி வரும் தனியார் குழுமத்திற்கு தொடர்புடைய சென்னை, நெல்லை, பெங்களூரு உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் கடந்த வாரம் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், வருமான வரித்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,
தனியார் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மூலம் ரூ. 400 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ. 3 கோடி பணம், ரூ. 2.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.