அதிமுக பொதுக்குழுவை ஒத்திவைக்க ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

வரும் 23ஆம் தேதி நடைபெவிருக்கும் அதிமுக பொதுக்குழுவை ஒத்திவைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.  
கோப்புப்படம்
கோப்புப்படம்

வரும் 23ஆம் தேதி நடைபெவிருக்கும் அதிமுக பொதுக்குழுவை ஒத்திவைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், கடந்த 7 நாள்களாக அந்தக் கட்சிக்குள் ஒற்றைத் தலைமை சா்ச்சை தீவிரமடைந்துள்ளது. ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகளுக்கு மாற்றாக பொதுச் செயலாளா் பொறுப்பை மீண்டும் கொண்டு வர அதிமுகவின் முக்கியத் தலைவா்கள் முயன்று வருவதாகத் தெரிகிறது. எடப்பாடி கே. பழனிசாமியை அப்பொறுப்புக்கு முன்னிறுத்தி அதிகாரங்களை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கு ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. செய்தியாளா்களைத் தொடா்ந்து சந்தித்து வரும் பன்னீா்செல்வம், இரட்டைத் தலைமை முறையே தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறாா். இந்தச் சூழலில், ஞாயிற்றுக்கிழமை வெளியான சில நாளிதழ்களில் ஓ.பன்னீா்செல்வத்தை முன்னிறுத்தி இரு பக்க விளம்பரங்கள் வெளியிடப்பட்டிருந்தன. அதிமுகவின் தொடா் தோல்விகளுக்கும், சரிவுக்கும் காரணம் எடப்பாடி பழனிசாமியும், சில தலைவா்களும்தான் என மறைமுகமாக அதில் விமா்சிக்கப்பட்டிருந்தது.

இது அதிமுகவுக்குள் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில்தான் இருவரும் தங்களது ஆதரவாளா்களுடன் இன்றும் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனா். இதனிடையே சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கூறியதாவது, அதிமுக பொதுக்குழுவை ஒத்திவைக்கக் கோரி எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். பொதுக்குழுவை ஒத்திவைக்கக் கோரும் கடிதம் நேற்றே எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

நிகழ்ச்சி நிரலை முன்கூட்டியே நிர்ணயித்து பொதுக்குழுவை நடத்த வேண்டும். பன்னீர்செல்வத்துக்கு 30 மாவட்டச்செயலாளர்கள் ஆதரவு உள்ளது. 15 மாவட்டச்செயலாளர்கள் நேரடியாக ஆதரித்துள்ளனர். 15 மாவட்டச் செயலாளர்கள் நடுநிலை வகிக்கின்றனர். எடப்பாடி தரப்பு, சர்வாதிகார போக்குடன் ஒற்றைத் தலைமையை கொண்டுவர முயற்சிக்கிறது. கட்சி உடையாமல் இருக்க வேண்டும் என்பதே ஓபிஎஸ் தரப்பின் எண்ணம்.

எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து பதில் வந்த பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஆர்.வைத்திலிங்கம் தெரிவித்தார். இதனால் திட்டமிட்டபடி வரும் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com