திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாதமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி செ.துர்கா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
தமிழகத்தில் தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற ஒரே மாணவி ஆவார்.
இவரின் மதிப்பெண்கள் விவரம் :
தமிழ் 100
ஆங்கிலம் 96
கணிதம் 87
அறிவியல் 79
சமூக அறிவியல் 86
மாணவியை பள்ளி தாளாளர் அது ராமமூர்த்தி பள்ளி தாளாளர் மருத்துவர் ராமமூர்த்தி, முதல்வர் செல்வி வைஷ்ணவி, மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் சக மாணவர்கள் என அனைவரும் பாராட்டினர். மாணவியின் தந்தை செல்வகுமார் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிகிறார்.