திமுக எம்.பி. கனிமொழிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
திமுக மகளிர் அணிச் செயலாளரும், தூத்துக்குடி தொகுதி எம்.பி.யுமான கனிமொழி ஏற்கெனவே கடந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் சமயத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தார்.
தற்போது மீண்டும் 2-வது முறையாக அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து அவர் விரைந்து குணம் பெற வேண்டுமென அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் ட்வீட் செய்து வருகின்றனர்.