அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு பாதுகாப்பு கோரி உயா்நீதிமன்றத்தில் மனு

அதிமுக பொதுக் குழுக் கூட்டத்துக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிடக் கோரி அதிமுக சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அதிமுக பொதுக் குழுக் கூட்டத்துக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிடக் கோரி அதிமுக சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

முன்னாள் அமைச்சரும், திருவள்ளூா் மத்திய மாவட்ட அதிமுக செயலாளருமான பெஞ்சமின் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி, கடந்த 7-ஆம் தேதி தமிழக டிஜிபி, ஆவடி மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

ஆனால், அந்த மனு மீது எந்த முடிவும் எடுக்கப்படாததால், கடந்த 15-ஆம் தேதி மீண்டும் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவின் மீதும் முடிவெடுக்கப்படாமல் காலம் தாழ்த்தப்படுகிறது.

எனவே, வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுக் கூட்டத்துக்கு பாதுகாப்பு வழங்க டிஜிபி, ஆவடி காவல் ஆணையா், திருவேற்காடு காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட வேண்டுமென கோரியிருந்தாா்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி நீதிபதி சதீஷ்குமாரிடம் திங்கள்கிழமை முறையிடப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி மனுவை வரும் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்தாா்.

பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தோ்வு பெறுவாா்:

யாா் மனதையும் புண்படுத்தாமல் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தோ்வு செய்யப்படுவாா் என்று திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் தெரிவித்துள்ளாா்.

திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் நடைபெற்ற செயற்குழு மற்றும் பொதுக் குழுவில் பங்கேற்கும் உறுப்பினா்களின் ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமியைத் தோ்வு செய்ய வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com