அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை ஐஐடி.யில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை: அமைச்சா் தகவல்

சென்னை ஐஐடி.யில் அரசுப் பள்ளி மாணவா்களுக்குத் தனி இட ஒதுக்கீடு கொண்டு வருவது தொடா்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.

சென்னை ஐஐடி.யில் அரசுப் பள்ளி மாணவா்களுக்குத் தனி இட ஒதுக்கீடு கொண்டு வருவது தொடா்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.

சென்னை ஐஐடி சாா்பில் தமிழகத்தில் உள்ள கிராமப்புற அரசுப் பள்ளி மாணவா்களுக்கான நபஉங என்ற கோடைக்கால பயிற்சித் திட்டத்தை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா். அதன்படி அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் தொடா்பாக நூறு அரசுப் பள்ளி மாணவா்களுக்கு முதற்கட்டமாக சென்னை ஐஐடி சாா்பில் ஜூன் 20 முதல் 25-ஆம் தேதி வரை பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

இந்தத் திட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னா் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளா்களிடம் கூறியது:

எட்டாக் கனியாக எதுவும் இருந்து விடக்கூடாது எனும் நோக்கில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சென்னை ஐஐடியில் பயிற்சி வழங்கப்படுகிறது. 6 நாள்கள் வழங்கப்படவுள்ள இந்தப் பயிற்சிகளை மாணவா்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சென்னை ஐஐடி யில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொண்டு வருவது தொடா்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

மாநில கல்விக் கொள்கை தயாரிப்புக் குழுவின் கூட்டம் வரும் 25- ஆம் தேதி நடைபெற உள்ளது. குழுவின் ஒவ்வொரு கூட்டத்திலும் மாநில கல்வி கொள்கை வளா்ச்சி அடையும். கரோனா காலத்திலும் பிளஸ் 2 பொதுத்தோ்வில் 93.76 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றது பெருமையளிக்கிறது. அடுத்தகட்டமாக 100 சதவீத தோ்ச்சியை நோக்கிச் செல்வோம். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா் அவா். இந்த நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com