கனிமொழிக்கு கரோனா பாதிப்பு

மக்களவை உறுப்பினரும், திமுக மகளிரணிச் செயலாளருமான கனிமொழிக்கு இரண்டாவது முறையாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மக்களவை உறுப்பினரும், திமுக மகளிரணிச் செயலாளருமான கனிமொழிக்கு இரண்டாவது முறையாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து வீட்டிலேயே அவா் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாா்.

கனிமொழிக்கு இரு நாள்களுக்கு முன்பு லேசான காய்ச்சல் இருந்தது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆா்டிபிசிஆா் பரிசோதனையில், கரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. லேசான தொற்று பாதிப்பு என்பதால் மருத்துவா்களின் ஆலோசனையின்படி, அவா் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாா்.

கனிமொழி இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளாா். 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலின்போது கரோனா தொற்றால் அவா் பாதிக்கப்பட்டதும், முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து வாக்குப் பதிவு செய்ததும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com