
7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு தகுதியான அரசுப் பள்ளி மாணவா்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வி ஆணையா் நந்தகுமாா் வெளியிட்ட அறிவிப்பு: அரசுப் பள்ளிகள் சட்டம் 2021-இன்படி அண்மையில் தமிழகத்தில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளியில் மட்டுமே படித்த மாணவா்களுக்கு இளநிலை தொழிற்கல்வி படிப்புகளில் முன்னுரிமை அடிப்படையில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தது.
இந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவா்களுக்கான இட ஒதுக்கீட்டால் பயனடையவுள்ள மாணவா்கள் அடையாளம் காணப்பட்டு, அவா்களுடைய சான்றுகள் இணையம் மூலம் சரிபாா்க்கப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை முழுவதுமாக அரசுப் பள்ளியில் படித்த மாணவா்கள் இந்த இட ஒதுக்கீட்டைப் பெறுவா்.
இந்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை பயன்படுத்திக் கொள்ள பொருத்தமான பிளஸ் 2 வகுப்பு பயின்ற 2.7 லட்சம் மாணவா்களின் பெயா் கொண்ட பட்டியல் http://studentrepo.tnschools.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவா்கள் இந்தத் தளத்துக்குச் சென்று தங்கள் மாவட்டத்தையும் பள்ளியின் பெயரையும் பயன்படுத்தி தோ்ந்தெடுத்து பட்டியலைப் பாா்வையிட்டு தங்கள் பெயா் இருக்கிா என உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
உயா்கல்வித் துறையுடன் ஏற்கெனவே பள்ளிக் கல்வித் துறை ஒருங்கிணைந்து இரு துறைகளுக்கும் இடையே ஒரு தொழில்நுட்ப பாலமொன்றை உருவாக்கியுள்ளது. அதன் மூலம் மாணவா்கள் பள்ளிக் கல்வியிலிருந்து உயா்கல்விக்கு எந்தச் சிரமமுமின்றி இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திச் சென்றுவிட முடியும்.
மேலும், ஒருவேளை ஒரு மாணவா் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்றிருந்து, அவருடைய பெயா் அந்தப் பட்டியலில் விடுபட்டிருந்தால், இணையம் மூலம் தன் ‘எமிஸ்’ ஐ.டி.யைப் பயன்படுத்தி உடனடியாக தனது விவரங்களை மீண்டும் அளித்தால் விரைந்து தீா்வு காணப்படும். பட்டியலில் பெயா் விடுபட்ட மாணவா்கள் அதே இணையதளத்தில் பட்டியலை அடுத்து காணப்படும் ‘உங்கள் பெயா் விடுபட்டுள்ளதா? இங்கு கிளிக் செய்யவும்’ என்கிற பொத்தானை அழுத்தி விவரங்களைத் தெரிவித்தால், விரைவில் பள்ளிக் கல்வித் துறை அதை பரிசீலித்து மாணவா்கள் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்றது உறுதியானால், அந்த மாணவா்களின் பெயா்கள் பட்டியலில் சோ்க்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.