ஒற்றைத் தலைமை முழக்கத்திற்கிடையே ஒரே மேடையில் ஓபிஎஸ், இபிஎஸ்

ஒற்றைத் தலைமை பிரச்னைகளுக்கு மத்தியில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியும் பொதுக்குழுவில் ஒரே மேடையில் பங்கேற்றுள்ளனர்.
ஒற்றைத் தலைமை முழக்கத்திற்கிடையே ஒரே மேடையில் ஓபிஎஸ், இபிஎஸ்

ஒற்றைத் தலைமை பிரச்னைகளுக்கு மத்தியில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியும் பொதுக்குழுவில் ஒரே மேடையில் பங்கேற்றுள்ளனர்.

அதிமுகவில் கடந்த சில தினங்களாக ஒற்றைத் தலைமை தொடர்பான சர்ச்சைகள் தீவிரமடைந்து வருகின்றன. அதிமுக பொதுக்குழுவில் இதுதொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ்ஸின் நீதிமன்ற மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம் அதிமுகவின் அமைப்பு சட்டவிதிகளில் திருத்தம் செய்ய தடை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் சென்னையில் இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு முக்கிய கவனம் பெற்றுள்ளது. ஒற்றைத் தலைமை சர்ச்சை தொடர்பாக ஓபிஎஸ்ஸுக்கும், இபிஎஸ்ஸுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் பொதுக்குழு அரங்கில் இருவரும் ஒரே மேடையில் ஒன்றாகக் கலந்து கொண்டனர். 

முன்னதாக பொதுக்குழு அரங்கிற்கு தனித்தனியே இருவரும் வந்தனர். ஒற்றைத் தலைமை தொடர்பாக அதிமுக தொண்டர்கள் அரங்கிற்கு உள்ளேயும், வெளியேயும் முழக்கங்களை எழுப்பி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com