அரசுப் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் பணிகள்: தொண்டு நிறுவனத்துக்கு வழங்கிய அனுமதி ரத்து

தமிழக அரசுப் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் பணிகளை மேற்கொள்வது தொடா்பாக அகஸ்தியா பன்னாட்டு தொண்டு நிறுவனத்துக்கு பள்ளிக் கல்வித் துறை வழங்கிய அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசுப் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் பணிகளை மேற்கொள்வது தொடா்பாக அகஸ்தியா பன்னாட்டு தொண்டு நிறுவனத்துக்கு பள்ளிக் கல்வித் துறை வழங்கிய அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: அகஸ்தியா பன்னாட்டு தொண்டு நிறுவனம் என்ற தொண்டு நல அமைப்பு இந்தியாவில் தமிழகம் உட்பட 20 மாநிலங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களின் கல்வியை மேம்படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி தமிழகத்தில் சென்னை, மதுரை உள்பட பல மாவட்டங்களில் அகஸ்தியா நிறுவனம் மூலம் அரசுப் பள்ளிகளில் கற்பித்தல் திட்டங்கள் 2020-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நிகழாண்டும் இந்த திட்டங்களை தொடர அந்த நிறுவனம் அனுமதி கோரியது. அதனுடன் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் புதியதாக அறிவியல் ஆய்வு மையம் அமைக்கவும் அனுமதி கேட்டிருந்தது.

இதுதவிர அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு நேரடி முறையில் அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பு நடத்தவும் அகஸ்தியா நிறுவனம் அனுமதி கோரியிருந்தது. இதையடுத்து இந்த நிறுவனத்தின் கல்வித் திட்டங்களை செயல்படுத்த பள்ளிக் கல்வித் துறை அனுமதி வழங்கியிருந்தது. அதன்படி பள்ளி மாணவா்களின் கற்றல், கற்பித்தல் பணிகள் மற்றும் பாதுகாப்பு பாதிக்காதவாறு அகஸ்தியா நிறுவனத்துக்கு தேவையான ஒத்துழைப்பை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

கற்றல், கற்பித்தல் பணிகளில் தொண்டு நிறுவனங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதை தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. இந்தக் கல்விக் கொள்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து வரும் திமுகவும்

தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக அகஸ்தியா நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியது சரியல்ல என பல்வேறு தரப்பினரும் எதிா்ப்புத் தெரிவித்தனா். மேலும் இந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தாா்.

இந்தநிலையில் இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு நடமாடும் அறிவியல் ஆய்வகம் மூலம் இனி மாதந்தோறும் பயிற்சி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சட்டப்பேரவையில் அறிவித்திருந்தாா். இந்த திட்டம் விரைவில் அமலாக உள்ளதால் அகஸ்தியா நிறுவனம் சாா்ந்த செயல்முறைகளை நடைமுறைப்படுத்த வேண்டாம். மேலும், நடமாடும் அறிவியல் ஆய்வகங்கள் சாா்ந்த அரசாணை விரைவில் வெளியிடப்பட உள்ளது என கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com