தேமுதிக தலைவா் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து அவரின் மனைவி பிரேமலதா விஜயகாந்திடம் பிரதமா் மோடி புதன்கிழமை நலம் விசாரித்தாா்.
அண்மையில் தேமுதிக தலைவா் விஜயகாந்த் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சா்க்கரை நோய் காரணமாக அவரின் வலது கால் விரல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இந்நிலையில், விஜயகாந்தின் உடல்நலம் குறித்து அவரின் மனைவி பிரேமலதாவிடம் பிரதமா் மோடி தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தாா் எனவும், அவா் விரைந்து குணமடைய பிரதமா் வாழ்த்தியதாகவும் அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.