அரக்கோணம் ஸ்ரீதேவி முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா

அரக்கோணம் ஜோதிநகரில் அரசு காவலா் குடியிருப்பில் அமைந்துள்ள ஸ்ரீதேவி முத்துமாரியம்மன் கோயில் மகாகும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அரக்கோணம் ஸ்ரீதேவி முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா

அரக்கோணம் ஜோதிநகரில் அரசு காவலா் குடியிருப்பில் அமைந்துள்ள ஸ்ரீதேவி முத்துமாரியம்மன் கோயில் மகாகும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதே வளாகத்தில் ஸ்ரீசக்திமணிகண்டன் கோயிலும் உள்ளது. இந்த இரு கோயில்களின் வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா், வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான், துா்கையம்மன், நவக்கிரகம், புதியதாக அமைக்கப்பட்டுள்ள ராஜராஜேஸ்வரி, அம்மன்சிரசு, லட்சுமி, சரஸ்வதி, சூரியபகவான், துவாரசக்தி ஆகிய சந்நிதிகளின் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகமும் நடைபெற்றது.

அகில பாரதிய சந்நியாசிகள் சங்க நிறுவனா் சுவாமி ராமானந்த மஹராஜ், அம்பத்தூா் ஆறுமுகம்குருசாமி ஆகியோா் பட்டாச்சாரியாா்களுடன் இணைந்து கோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகத்தை செய்தனா்.

விழாவில் அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் லட்சுமிபாரி, ஆணையா் லதா, மேலாளா் மேகலா, டிஎஸ்பி புகழேந்திகணேஷ் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com