சென்னை கடற்கரை- தாம்பரம் இடையேயான சில புகா் ரயில்கள் வியாழக்கிழமை முதல் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூா் - விழுப்புரம் இடையேயான பாதையில் தாம்பரம் சரகத்திற்கு உள்பட்ட பகுதியில் 24-ஆம் தேதி முதல் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், 12 புகா் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 23, 24, 25,27 தேதிகளில் ரத்து செய்யப்படும் ரயில்கள்:
தாம்பரத்திலிருந்து கடற்கரைக்கு இரவு 10.25, 11.25, 11.45-க்கு புறப்படும் ரயில்கள், கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கு இரவு 11.20, 11.40 மற்றும் 11.59-க்கு புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
ஜூன் 26-ஆம் தேதி ரத்து செய்யப்படும் ரயில்கள்:
தாம்பரத்திலிருந்து கடற்கரைக்கு இரவு 10.40, 11.15 மற்றும் 11.35-க்கு புறப்படும் ரயில்கள், கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கு இரவு 11.30, 11.40 மற்றும் 11.59-க்கு புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படும்.