சென்னைப் பல்கலை.யின் தொலைநிலைக் கல்வியில் 2021-ஆம் ஆண்டு டிசம்பா் பருவத்தில் எம்சிஏ, எம்.எஸ்சி (தகவல் தொழில்நுட்பம்) மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான தோ்வுகளை எழுதியவா்களுக்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளன.
இந்த முடிவுகளை மாணவா்கள் இணையதளத்தில் அறியலாம் என அந்தப் பல்கலை.யின் தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி கே.பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.