குடியரசுத் தலைவா் வேட்பாளா் திரௌபதி முா்முவுக்காக அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமியிடம் பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை வியாழக்கிழமை ஆதரவு கோரினாா்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சாா்பில் குடியரசுத் தலைவா் வேட்பாளராக திரௌபதி முா்மு நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்காக பல்வேறு கட்சிகளிடம் பாஜக ஆதரவு கேட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீா்செல்வம் இல்லத்துக்கு பாஜக மேலிடப் பொறுப்பாளா் சி.டி.ரவி மற்றும் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலையும் வந்தனா். இருவரும் ஓ.பன்னீா்செல்வத்தை சந்தித்து ஆதரவு கேட்டனா். இந்தச் சந்திப்பு அரை மணி நேரம் நீடித்தது.
அதைப்போல கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்கும் நேரில் சென்று சி.டி.ரவியும், கே.அண்ணாமலையும் ஆதரவு கோரினா். இருவரும் தேசிய ஜனாயக கூட்டணியின் வேட்பாளரை ஆதரிப்பதாகக் கூறியுள்ளனா்.