வரும் 27ஆம் தேதி காலை 10 மணிக்கு பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
இதையும் படிக்க- ஓ. பன்னீர்செல்வத்திடம் ஆதரவு கோரினார் திரௌபதி முர்மு
தமிழகம் முழுவதும் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 8,83,882 பேர் எழுதினர். ஏற்கெனவே பத்து மற்றும் பன்னிரென்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 20-ஆம் தேதி வெளியானது.
இந்த நிலையில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வரும் 27ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் துறை இன்று அறிவித்துள்ளது.
தேர்வு முடிவுகளை www.dge.tn.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் அறியலாம். ஜூலை 7ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது முன்கூட்டியே வெளியிடப்படவுள்ளது.