தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகள் ஸ்மார்ட் தொழிற்சாலைகளாக மாற்ற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மேம்பாட்டு உற்பத்தி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றி வருகிறார்.
அப்போது, தொழில்துறையினருக்கு சாதமான சூழல் தமிழகத்தில் உள்ளது.
உற்பத்தியில் அகில இந்திய அளவில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக உள்ளது. டைடல் பார்க்குகள் மூலம் இளைஞர்களுக்கு அவர்களது சொந்த ஊரிலேயே வேலை கிடைக்கும்.
2030 ஆம் ஆண்டில் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி என்ற இலக்குடன் தமிழ்நாடு அரசு செயல்படுகிறது.
தற்போதுள்ள தொழிற்சாலைகள் ஸ்மார் தொழிற்சாலைகளாக மாற்ற வேண்டும் என்று கூறினார்.
இதையும் படிக்க | அதிமுக பதவிச் சண்டை... மோடியை சந்திக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்?