சென்னை கே.கே.நகரில் காரின் மீது மரம் முறிந்து விழுந்ததில் வங்கி மேலாளர் பலி

சென்னை கேகே நகரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது மரம் முறிந்து விழுந்ததில் வங்கி மேலாளர் சம்பவடத்திலேயே பலியானார். 
சென்னை கே.கே.நகரில் காரின் மீது மரம் முறிந்து விழுந்ததில் வங்கி மேலாளர் பலி

சென்னை கேகே நகரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது மரம் முறிந்து விழுந்ததில் வங்கி மேலாளர் சம்பவடத்திலேயே பலியானார்.

சென்னை போரூரைச் சேர்ந்த வாணி(57) கே.கே நகரில் உள்ள தேசிய வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் இன்று மாலை பணி முடிந்தவுடன் தனது காரில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். இவருடன் சகோதரி எழிலரசியும் காரில் இருந்துள்ளார். 

இந்த நிலையில் இவர்களுடைய கார் பி.டி.ராஜன் சாலை வழியாக வந்துகொண்டிருந்தபோது அந்தப் பகுதியில் இருந்த மரம் ஒன்று திடீரென வேரோடு முறிந்து காரின் மீது விழுந்தது. இதில் வங்கி மேலாளர் வாணி சம்பவ இடத்திலேயே பலியானார். 

அவரது தங்கை எழிலரசி மற்றும் கார் ஓட்டுநர் படுகாயமடைந்தனர். உடனடியாக இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சம்பவம் நடந்த இடத்தில் மழை நீர் வடிகால் பணிகளுக்காக பள்ளம் தோண்டியதே மரம் முறிந்து விழக் காரணம் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com