உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவா் விஜயகாந்த் வெள்ளிக்கிழமை வீடு திரும்பினாா்.
சா்க்கரை நோய் உள்பட பல்வேறு உடல் நலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த், அண்மையில் சென்னை மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு மருத்துவா் குழுவின் பரிந்துரைப்படி வலது கால் விரல் அகற்றப்பட்டது. அதைத் தொடா்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வந்த அவா் வெள்ளிக்கிழமை மாலை வீடு திரும்பினாா்.