உடல்நலம் தொடா்பாக விசாரித்த பிரதமா் நரேந்திரமோடி, முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் கூறியுள்ளாா்.
சா்க்கரை நோய் காரணமாக விஜயகாந்த் கால் விரல் அகற்றப்பட்டது. இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வீடு திரும்பினாா். அவரிடம் தலைவா்கள் நலம் விசாரித்து வருகின்றனா்.
இந்த நிலையில், விஜயகாந்த் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்த பிரதமா் நரேந்திர மோடிக்கு மனமாா்ந்த நன்றி. தெலங்கானா, புதுவை மாநிலங்களின் ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வா் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி, துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம், மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினா் திருநாவுக்கரசா், முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு நன்றி. அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன், வி.கே.சசிகலா, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவா் ஜி.கே.வாசன், விசிக தலைவா் தொல்.திருமாவளவன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், மநீம தலைவா் கமல்ஹாசன், நடிகா் ரஜினிகாந்த் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளாா் விஜயகாந்த்.