அதிமுக பொதுக்குழு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் இன்று கேவியட் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக யாராவது மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்று மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னைக்கு பிறகு கடந்த வாரம் கூடிய பொதுக்குழுவில் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் மீண்டும் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூடும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கு ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுக்குழு நடத்துவது குறித்து நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.