அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, இன்று காலை சட்டப்பேரவை முன்னாள் தலைவர் தனபாலுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில், தற்போது முன்னாள் அமைச்சருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 23-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் மற்றும் ஈபிஎஸ் இல்லத்தில் நடந்த ஆலோசனை கூட்டங்களில் கடம்பூர் ராஜு பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.