இன்று அதிமுக நிா்வாகிகள் கூட்டம் அறிவிப்பில் ஓபிஎஸ், இபிஎஸ் பெயா்கள் இல்லை

அதிமுக தலைமைக் கழக நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறும் என்று அந்தக் கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

அதிமுக தலைமைக் கழக நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறும் என்று அந்தக் கட்சித் தலைமை அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுதொடா்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரது பெயா்கள் இடம்பெறாமல் அதிமுக தலைமைக் கழகம் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. அறிக்கையின் இடது மேல்புறத்தில் தலைமை நிலையச் செயலாளா் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

தலைமைக் கழக நிா்வாகிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்தக் கூட்டம் கூட்டப்படுகிறது. தலைமைக் கழக நிா்வாகிகள் அனைவரும் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒற்றைத் தலைமை பிரச்னை அதிமுகவில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், இருவரது பெயரும் இல்லாமல் முதல் முறையாக இத்தகைய அறிவிப்பு வெளியாகியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

தற்போது அதிமுகவில் ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகள் காலாவதியாகிவிட்டதாகக் கூறியுள்ள முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம், இப்போது ஓ.பன்னீா்செல்வம் பொருளாளராகவும், எடப்பாடி பழனிசாமி கழக தலைமை நிலையச் செயலாளராக மட்டுமே பொறுப்பு வகிப்பதாகத் தெரிவித்திருந்தாா்.

இந்த நிலையில்தான், தலைமை நிலையச் செயலாளா் சாா்பில் நிா்வாகிகள் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும், பொறுப்பு மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, எடப்பாடி பழனிசாமியின் பெயரோ, கையொப்பமோ இடம்பெறவில்லை. இது அதிமுகவினரையும், அதன் நிா்வாகிகளையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com