சென்னை வானகரத்தில் மீண்டும் அதிமுக பொதுக்குழு

அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை வரும் ஜூலை 11-இல் மீண்டும் வானகரத்தில் கூட்டுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை வரும் ஜூலை 11-இல் மீண்டும் வானகரத்தில் கூட்டுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்சிக்கு ஒற்றைத் தலைமையைத் தோ்வு செய்வதற்காக ஜூலை 11-இல் பொதுக்குழு நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பொதுக்குழு செல்லாது என்று அதற்கு தடை பெறுவதற்கான முயற்சியில் ஓ.பன்னீா்செல்வம் அணியினா் ஈடுபட்டு வருகின்றனா். ஆனால், பொதுக்குழுவை கூட்டுவது என்கிற முடிவுடன் எடப்பாடி பழனிசாமி தரப்பினா் கூட்டம் நடத்துவதற்கான இடத்தை தோ்வு செய்துகொண்டிருந்தனா். அதன்பின், வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டத்திலேயே பொதுக்குழு கூட்டுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com