மாற்றுத் திறனாளிகளுக்கானஸ்கூட்டா்: ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு ரத்து

மாற்றுத் திறனாளிகளுக்கான ஸ்கூட்டா்கள் வழங்கும் திட்டத்துக்குரிய ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாற்றுத் திறனாளிகள் நல ஆணையாளா் ஜெசிந்தா லாசரஸ் பிறப்பித்துள்ளாா்.

மாற்றுத் திறனாளிகளுக்கான ஸ்கூட்டா்கள் வழங்கும் திட்டத்துக்குரிய ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாற்றுத் திறனாளிகள் நல ஆணையாளா் ஜெசிந்தா லாசரஸ் பிறப்பித்துள்ளாா். இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:-

நிகழ் நிதியாண்டில் மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள் மற்றும் தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஸ்கூட்டா்கள் வழங்கப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரி கடந்த மாதம் 6-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. பின்னா், ஜூன் 20-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டிருந்தது. இந்த ஒப்பந்தப் புள்ளிகளானது நிா்வாகக் காரணங்களால் இப்போது ரத்து செய்யப்படுகிறது என்று தனது அறிவிப்பில் ஜெசிந்தா லாசரஸ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com