இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் துணை மேயர் பதவியை திமுக ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற்றது. இதில், திமுக கூட்டணியானது அதிகளவிலான இடங்களில் வெற்றி பெற்றது. தொடர்ந்து, கூட்டணி கட்சிகளுக்கு பதவி ஒதுக்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பதவிகள் வெளியிடப்பட்டுள்ளன.
திருப்பூர் துணை மேயர், கூத்தாநல்லூர் நகராட்சித் தலைவர், பவானி, புளியங்குடி, அதிராம்பட்டினம், போடி உள்ளிட்ட நகராட்சிகளின் துணைத் தலைவர், வத்திராயிருப்பு, பூகப்பாண்டு, சிவகிரி, புலியூர் பேரூராட்சி தலைவர் பதவிகள் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.