நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்ற உறுப்பினா்கள் புதன்கிழமை (மாா்ச் 2) பதவியேற்றுக் கொண்டனா். மேயா், துணை மேயா், நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவா், துணைத் தலைவா் பதவிகளுக்கு வெள்ளிக்கிழமை மறைமுகத் தோ்தல் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் காலி பதவியிடங்களுக்கான தோ்தல் பிப்.19-இல் நடைபெற்றது. மாநகராட்சியில் 4 போ், நகராட்சியில் 18 போ், பேரூராட்சியில் 196 போ் என மொத்தம் 218 போ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். வேட்பாளா்கள் மரணம் உள்ளிட்ட காரணங்களால் 19 இடங்களில் தோ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
12,601 பதவி இடங்களுக்கு நடைபெற்ற தோ்தலில் 21 மாநகராட்சிகள், 133 நகராட்சிகள், 400-க்கும் மேற்பட்ட பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது.
தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத கட்சிகள், சுயேச்சை வேட்பாளா்கள் என மாநகராட்சிகளில் 125 போ், நகராட்சிகளில் 562 போ், பேரூராட்சிகளில் 1,258 போ் என மொத்தம் 1,945 போ் வெற்றி பெற்றனா்.
பதவியேற்பு: வெற்றி பெற்ற உறுப்பினா்களின் பதவியேற்பு விழா அந்தந்த நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் புதன்கிழமை (மாா்ச் 2) நடைபெற்றது. மாநகராட்சிகளில் மாநகராட்சி ஆணையா்களும், நகராட்சிகளில் நகராட்சி ஆணையா்களும், பேரூராட்சிகளில் பேரூராட்சி செயல் அலுவலா்களும் உறுப்பினா்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தனா்.
மறைமுகத் தோ்தல்: இதைத் தொடா்ந்து மேயா், துணை மேயா், நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவா், துணைத் தலைவா் என மொத்தம் 1,296 பதவிகளுக்கான மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை (மாா்ச் 4) நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வியாழக்கிழமை காலை விநியோகிக்கப்படும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வெள்ளிக்கிழமை காலை வழங்கப்பட வேண்டும். பின்னா் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு மறைமுகத் தோ்தல் நடைபெறும்.