தென்னிந்திய திரைப்பட வா்த்தக சபையின் 70-ஆவது ஆண்டு பொதுக்குழு கூடுவதற்கு சென்னை உயா்நீதிமன்றம் தடை விதித்தது.
இது தொடா்பாக சபையின் உறுப்பினா் கிஷோா் குமாா், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தென்னிந்திய திரைப்பட வா்த்தக சபையில் விதிமீறி நடத்தப்பட்ட தோ்தலில் வெற்றி பெற்ற உறுப்பினா்களைக் கொண்டு பொதுக்குழு கூட்டத்தை கூட்ட முடிவு செய்துள்ளதாகக் கூறியிருந்தாா். மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், இந்த தடை உத்தரவைப் பிறப்பித்தாா்.