சென்னை: தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில், நகைக்கடன் தள்ளுபடி பெற அனுமதிக்கப்பட்ட நபர்களின் விவரங்களை சிறப்பு தணிக்கை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள வேளாண் கூட்டுறவு வங்கிகளில் 40 கிராம் வரையிலான தங்க நகைக் கடன் பெற்றவர்களுக்கு, பல்வேறு நிபந்தனைகளுக்கு உள்பட்டு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே, நகைக் கடன் தள்ளுபடி பெற அனுமதிக்கப்பட்ட நபர்களின் விவரங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதி பெற்றவர்களின் விவரங்களை மண்டல அளவில் சிறப்பு தணிக்கை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.