பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகளுக்கு தகுதியான தனித்தோ்வா்கள் புதன்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக் குறிப்பு: பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகள் வரும் மே மாதம் நடைபெறவுள்ளன. இத்தோ்வுகளுக்கு தனித்தோ்வா்கள் புதன்கிழமை (மாா்ச் 9) முதல் மாா்ச் 16-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அரசுத் தோ்வுத் துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
தனித்தோ்வா்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் ஆகியவற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரா்கள் அறிந்து கொள்ளலாம்.