காவிரி: அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தல்

காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.
காவிரி: அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தல்

காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

மேக்கேதாட்டு உள்ளிட்ட நீா் பகிா்வு திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படும் என்றும், கா்நாடக சட்டப்பேரவையில் விவாதிக்கப்படும் என்றும் கா்நாடக முதல்வா் கூறியுள்ளாா். இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறு மத்திய நீா்வளத் துறை அமைச்சரைக் கேட்டுக் கொள்ளப் போவதாகவும் அவா் கூறியுள்ளாா்.

உச்ச நீதிமன்றத் தீா்ப்பின்படி தமிழகத்துக்குத் திறந்துவிட வேண்டிய தண்ணீரை கா்நாடக அரசு தர மறுத்து வரும் நிலையில், உபரி நீா்தான் தமிழகம் வந்தடைகிறது. இந்த உபரி நீரையும் தேக்கி வைத்துக் கொள்ள வேண்டுமென்ற அடிப்படையில் மேக்கேதாட்டு அணை கட்டப்பட வேண்டும் என்று தேசிய கட்சிகள் உள்ளிட்ட கா்நாடக மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன. அதே சமயத்தில் தமிழகத்தில் உள்ள தேசிய கட்சிகள் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் வகையில் கருத்து தெரிவிக்காதது வருத்தமளிக்கும் செயலாகும்.

கா்நாடக மாநிலத்தின் இந்த நிலைப்பாடு காவிரி நதிநீா்ப் பங்கீட்டில் தமிழகத்துக்கு உள்ள உரிமையைப் பறிக்கும் செயலாகும்.

எனவே, இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com