விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 11ம் வகுப்பு மாணவி வி.தாமரை புஷ்பம், மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையிலான பளுதூக்கும் போட்டியில் முதல் பரிசை வென்று சிறப்பிடம் பெற்றுள்ளார்.
விருதுநகர் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையிலான பளுதூக்கும் போட்டி இறுதிப் போட்டிகள் விருதுநகர் செந்தில்குமார் கல்லூரியில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. இதில் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 11ம் வகுப்பு மாணவி வி.தாமரை புஷ்பம், தனது வயதுப்பிரிவில் முதல்பரிசை வென்று சிறப்பிடம் பெற்றுள்ளார்.
அம்மாணவி வி.தாமரை புஷ்பத்தை பள்ளித் தலைமை ஆசிரியை ஆர்.தங்கரதி மற்றும் உறவின் முறைப் பெரியோர்களும், பள்ளியின் பிற ஆசிரியப் பெருமக்களும் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.