தஞ்சை பெரியகோயிலில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி இன்று சுவாமி தரிசனம் செய்தார்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகத் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி இன்று தஞ்சாவூா் வருகை தந்தார். சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு சனிக்கிழமை வந்த அவா், அங்கிருந்து காா் மூலம் தஞ்சாவூருக்கு பிற்பகல் சென்றார். தஞ்சாவூா் சுற்றுலா மாளிகையில் மதிய உணவுக்கு பிறகு முன்னாள் ராணுவத்தினரை சந்தித்துப் பேசினார். பின்னா் தஞ்சாவூா் பெரியகோயில் ஆளுநர் ரவி சுவாமி தரிசனம் செய்தார். ஆளுநருடன் அவரது மனைவி லட்சுமி ரவியும் உடன் இருந்தார்.
இதையும் படிக்க- முதுநிலை நீட் தேர்வு: கட் ஆஃப் மதிப்பெண் குறைப்பு
முன்னதாக சரசுவதி மகால் நூலகத்தையும் அவர் பார்வையிட்டார். இதனிடையே ஆளுநர் வருகையையொட்டி தஞ்சாவூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, மாா்ச் 13 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை தஞ்சாவூரிலிருந்து காா் மூலம் கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி பாண்டுரங்கன் சமஸ்தான் கோயில் வளாகத்தில் நடைபெறும் விஸ்வ வித்யாலயா வேத பாடசாலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்கிறாா்.
அங்கிருந்து மீண்டும் காா் மூலம் தஞ்சாவூருக்கு வரும் அவா் பிற்பகல் 2.40 மணிக்கு தென்னகப் பண்பாட்டு மையத்துக்குச் சென்று, வடகிழக்கு மாநிலங்களின் கலை விழாவான கைவினைப் பொருட்காட்சி மற்றும் உணவுத் திருவிழாவில் கலந்து கொள்கிறாா். இரவு தஞ்சாவூரில் தங்கும் அவா் திங்கள்கிழமை காலை காா் மூலம் திருச்சி விமானநிலையத்துக்குச் சென்று, அங்கிருந்து விமானத்தில் சென்னைக்குச் செல்கிறாா்.