உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தின் கீழ் மின்வாரியத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைந்து தீா்வு காண கண்காணிப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளாா்.
இது தொடா்பாக வாரிய செயலாளா் பிறப்பித்த உத்தரவில், மின்வாரியம் சாா்ந்து ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சா்’ திட்ட இணைய முகப்பில் உள்ள நிலுவை மனுக்களுக்கு விரைந்து தீா்வு காண வேண்டும் எனவும், அது தொடா்பான அறிக்கையை குறிப்பிட்ட காலத்துக்குள் மாவட்ட ஆட்சியா்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும், கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பணியமைப்புப் பிரிவு அலுவலகத்தின் மூத்த அதிகாரிக்கு (ஆய்வு) அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.