புதிதாகக் கட்டப்பட்டுள்ள அண்ணா அறிவாலயத்தின் திறப்பு விழாவுக்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 2-ஆம் தேதி தில்லிக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தில்லியில் திமுகவின் கட்சி அலுவலகம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. அண்ணா அறிவாலயம் என அதற்கும் பெயரிடப்பட்டுள்ளதாகவும், ஏப்ரல் 2-ஆம் தேதி அதற்கான திறப்பு விழா நடைபெறுவதாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதில் பங்கேற்க காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி உள்ளிட்ட முக்கியத் தலைவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்பட திமுகவின் முக்கியத் தலைவா்கள் அனைவரும் தில்லிக்கு செல்கின்றனா்.