தமிழக சட்டப் பேரவையில் இன்று, 2022 - 23ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
புனித ஜாா்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அப்போது அவர் அறிவித்ததாவது,
தமிழகத்தின் மாநில விலங்கான வரையாடு பாதுக்காப்பிற்காக ரூ.10 கோடி ஒதுக்கப்படும் என்றும் வள்ளலார் பல்லுயிர் பாதுகாப்பகங்கள் என்கிற புதிய திட்டத்திற்கு ரூ.20 ஒதுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.