தமிழக சட்டப் பேரவையில் இன்று, 2022 - 23ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
தமிழக நிதிநிலை அறிக்கையை, 2014ஆம் ஆண்டு முதல் வருவாய்ப் பற்றாக்குறை ஆண்டுதோறும் அதிகரித்து வந்த நிலையில், இந்த ஆண்டு இந்த நிலை மாற்றப்பட்டு 7000 கோடி ரூபாய்க்கும் மேல் தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை குறைய உள்ளது என்ற நல்ல தகவலுடன் பழனிவேல் தியாகராஜன் தொடங்கினார்.
இதில், உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை, கிழக்கு கடற்கரைச் சாலை 6 வழிச்சாலையாக மாற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதிரடி அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.
தமிழ் வளர்ச்சி, தொல்லியல் துறையில் அகழாய்வு, களஆவுகள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, பள்ளிக் கல்வித் துறை என பல்வேறு துறைகளில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
தமிழக நிதிநிலை அறிக்கையின் முழு விவரங்களையும் அறிய.. இங்கே கிளிக் செய்யவும்.